Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சியில் 80 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:47 IST)
சென்னை பிராட்வே பகுதியில் உரிமம் புதுப்பிக்காத 70 கடைககளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர்
 

சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  நீண்ட நாட்களாக வரி  வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை  மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த  நிலையில்,  இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,. தொழில் வரி,  நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும்,  பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி , கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும்  வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments