Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. குணமடைய கொடநாடு எஸ்டேட் சார்பில் கோடிக்கணக்கில் காணிக்கை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (16:19 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மைசூரு சாமூண்டேஸ்வரி கோவிலுக்கு ஒரு கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி ஆபரணங்கள் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
 

 
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி மைசூருவில், சாமுண்டேஸ்வரி கோயிலில் உள்ள கணேசர் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் சென்னையில் இருந்து சென்றுள்ளனர்.
 
அவர்கள் அங்குள்ள கணேசர் கோயிலுக்கு ரூ. 42,29,614 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கக் கவசங்களையும், ஆஞ்சநேயருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி கவசங்களையும் நன்கொடையாக அளித்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கு தங்கி இருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
 
கணேசருக்கு அளித்த நன்கொடையை ஜெயா பப்ளிகேஷன் பெயரிலும், ஆஞ்சநேயருக்கு அளித்த நன்கொடையை கொடநாடு என்ற முகவரியிலும் அளித்துள்ளனர். இந்த நன்கொடை அனைத்தும் சாமுண்டேஸ்வரி கோயில் மேலாண்மை கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments