Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (09:49 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது நாட்டையே உலுக்கியது.


 
 
இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் நன்றாகவே வெளிப்பட்டது.
 
செய்தியாளர்களின் சந்திப்பிற்கு பின்னர் வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வம் மீண்டும் தனது வீட்டின் முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.

 

நன்றி: Polimer TV
 
அப்போது பதில் அளித்த அவர், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை ரத்தத்தின் ரத்தங்களாகிய தொண்டர்களை அது பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தையும் அது பிரதிபலிக்கும் என்றார். தனிக்கட்சி ஆரம்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு தான் அதிமுகவின் அடிமட்ட தொண்டன் என பதிலளித்தார்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments