Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் தான் முதல் குற்றவாளி’

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (15:19 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறும் ஓ.பன்னீர்செல்வம் தான் முதல் குற்றவாளி என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறினார்.


 


இதுகுறித்து கூறியுள்ள வைகைச் செல்வன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில், ஓ.பி.எஸ். அணியினர் பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைகளில் சந்தேகம் என்றால் அப்போது, உளவுத்துறையை தனது கையில் வைத்திருந்த ஓபிஎஸ் தான் முதல் குற்றவாளி” என்று தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments