ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை..!

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:31 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி என்ற பகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார்.

நேற்று காலை பத்து மணிக்கு ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிய போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓ பன்னீர் செல்வம் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ பன்னீர்செல்வம் நேற்று கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஹோட்டல் அறையில் முழு ஓய்வு எடுத்ததாகவும் நிர்வாகிகள் கூட்டம் இன்னொரு நாள் நடைபெறும் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments