Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடை குட்டிக் கதை கூறி திமுக எம்.எல்.ஏ.க்களை நக்கலடித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (21:05 IST)
பேரவையில் இருந்து காரணமே இல்லாமல் அடிக்கடி திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்வதாகக் கூறிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சலூன் கடை குட்டிக் கதை மூலம் அதைக் கூறினார். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
 
சட்டப் பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர். இதன்பிறகு பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் (திமுகவினர்) அடிக்கடி வெளிநடப்புச் செய்வதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது. ஒருவர், ஒரு சலூன் கடைக்குச் சென்றார். அங்கு அவரை உட்கார வைத்து அவர் மீது துணி போர்த்தப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் கோபித்துக் கொண்டு அந்தக் கடையில் இருந்து வெளிநடப்புச் செய்து விட்டார். இதன்பின், அவரிடம் எதற்காகச் சென்றீர்கள் எனக் கேட்ட போது, என்மீது பொன்னாடை போன்று துணி போற்றப்படுகிறது. அதைப் பார்த்து யாரும் கை தட்டவில்லை. இதனால், வெளிநடப்புச் செய்து விட்டேன் என்றார். இதுபோன்றுதான் திமுகவினரின் வெளிநடப்பு இருக்கிறது. காரணமே இல்லாமல் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments