Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி மீட்டிங் போட்ட ஓபிஎஸ்: முக்கியஸ்தர்கள் வீட்டில் ஆஜர்!!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:03 IST)
துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் அதிமுகவின் முக்கிய நபர்களுடன் அலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.
 
அதிமுக செயற்குழு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற காரசார விவாதம் நடைபெற்றதே தவிர அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.   
 
இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார். 
 
இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த முறை போல இந்த முறையும் இது அதிமுகவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments