Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட போச்சே... புகைச்சலில் ஓபிஎஸ் அண்ட் கோ?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (13:29 IST)
அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதர்வாளர்களுக்கு அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்தது. 
 
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வோம் என கூறினார். ஆனால் அவரது கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்வதால் பிரச்சினை ஏற்படும் என கூறியுள்ள அவர் என்றென்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்தான் இருப்பார் என கூறியுள்ளார். 
 
அதே சமயம் ராஜேந்திர பாலாஜியின் கருத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. என்ன இருந்தாலும் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்படுவது நியாமானதில்லை என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. முன்பை போல மத்தியும் பன்னீர்செல்வத்தின் மவுசு குறைந்துவிட்டதால் இப்படி கூறப்படுகிறதோ எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments