Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்ணாசாலை; 1000 பேர் கைது

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (11:23 IST)
சென்னை டி.எம்.எஸ் மருத்துவ இயக்குநகரம் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


 
மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு 11,000க்கும் மேற்பட்டோர் செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளை கடந்தும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வேண்டி கடந்த சில மாதங்களாக செவிலியர்கள் போராடி வருகிறார்கள்.
 
செவிலியர்களின் கோரிக்கைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் செவிலியர்கள் வந்துள்ளனர்.
 
செவிலியர்கள் திடீரென வளாகத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் போராட முயற்சித்தனர். இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் போராட முயன்ற செவிலியர்களை காவல்துறையினர் சிறை பிடித்தனர். 
 
பெண் காவலர்கள் அந்த பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செவிலியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்க 10000க்கும் அதிகமானோர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments