Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டைவிரலில் வெட்டு! தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:43 IST)
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தையின் கையில் இருந்த வென்ப்ளானை எடுக்கும் போது தவறுதலாக கட்டை விரலை வெட்டியுள்ளார் செவிலியர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளின் பிறந்த குழந்தை உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக செலுத்தப்பட்டு வந்துள்ளது. அதற்காக குழந்தையின் கையில் வென்ப்ளான் போடப்பட்டு இருந்துள்ளது.

குழந்தையின் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் அறிவிக்கப்பட்ட நிலையில் கையில் இருந்த வென்ஃப்ளானை செவிலியர் கத்தரிக்கோலால் நறுக்கியுள்ளார். அப்போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலையும் நறுக்க விரலின் பெரும்பகுதி வெட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் அழுது புலம்பியுள்ளனர். பின்னர் குழந்தையின் விரல் சேர்த்து வைத்து தையல் போடப்பட்டுள்ளது. விரல் சேருமா இல்லையா என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியவரும் என சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட செவிலியர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments