Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தான் ஒருவன் வந்தான்! – தேர்தலுக்காக ட்ரெண்ட் செய்யும் தம்பிகள்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (14:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விருப்பமனு முறையில்லாமல் நேரடியாக அறிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்நிலையில் சமீபத்தில் கட்சிக்குள் நடந்த உள்பூசல் காரணமாக கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் நாதக தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலமாக சீமான் கட்சி அரசியல் முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments