அதிமுக, திமுகவுக்கு அடுத்து நாங்கதான்..! – நம்பிக்கையளிக்கும் நாம் தமிழர் வாக்கு எண்ணிக்கை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (10:58 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. இவை தவிர்த்த அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவையும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. 234 தொகுதிகளில் மொத்தமாக கணக்கிடுகையில் அதிமுக, திமுகவிற்கு பிறகு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ள கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments