Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:47 IST)
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
 

 
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு (2017) முதல் புதிய ரே‌ஷன் கார்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 
 
இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், ’குடும்பதாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டையில் முழுமையாக விவரங்களை பெற்று வருகிற 30ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments