Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிறுத்தப்படுகிறதா? தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (17:02 IST)
ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த இதுவரை எந்தவிதமான புகார் வரவில்லை என்றும் எனவே தேர்தலை நிறுத்தும் பேச்சுக்கு இடமில்லை என்றும் தமிழக தேர்தல் ஆணையர்  சத்யபிரத சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார்கள் அனுப்பலாம் என்றும் இதுவரை பெறப்பட்டுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஈரோடு கிழக்கில் சட்டம் ஒழுங்கு சுமுகனான முறையில் உள்ளது என்றும் ஒரு சில புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று இதுவரை எந்தவித புகார் என்னிடம் வரவில்லை என்றும் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்துக்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
 
 எனவே ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments