Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75% உயர்ந்த விலை: இம்முறை வெங்காயம் அல்ல...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (11:04 IST)
வெங்காயத்தின் விலை உயர்வை தொடர்ந்து தற்போது உருளைகிழங்கின் விலையும் உயர்ந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காய விலை எகிறியது. தற்போது ஓரளவிற்கு இந்த விலை ஏற்றம் கட்டுக்குள் வந்துள்ளது. 
 
ஆனால், தற்போது உருளைகிழங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டெல்லியில் உருளைக்கிழங்கின் விலை 75%, கொல்கத்தாவில் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி, கொலகத்தா மட்டுமின்றி மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் விலை அதிகரித்துள்ளது.
 
உருளைக்கிழங்கு அதிகம் விலையும் மாநிலங்களான பஞ்சாப், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவம் மாறு அக்டோபரில் மழை பெய்ததால் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது என விலை உயர்வுக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதைத்தவிர்த்து அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய்,தேயிலை, சர்க்கரை பால், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments