அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (13:35 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
பொதுவாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வட மாவட்டங்களுக்கு அதிக மழையை தரும் பிரதான மழைக்காலம் இதுவாகும்.
 
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் இந்தியப் பகுதிகளிலிருந்து முழுமையாக விலகும் நிலை காணப்படுகிறது. 
 
இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் இந்தத் தொடக்கம் தமிழகத்தின் நீர் ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments