Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மள் தமிழ்நாட்ல படிச்சான்..! போலி ஆவணங்கள் கொடுத்த 200 வட மாநிலத்தவர்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:07 IST)
தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் சேர 200 வட மாநிலத்தவர் போலி சான்றிதழ் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அஞ்சலக துறை, இந்தியன் ஆயில், சிஆர்பிஎப் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும், இந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளதாக புகார்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் யுபிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழக அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பிய பல சான்றிதழ்கள் போலியானவை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் படித்தது போல போலி சான்றுகளை காட்டி 200 வட மாநிலத்தவர் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

போலி சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க பரிந்துரைத்துள்ள அரசு தேர்வுகள் துறை அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments