Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கெட் பிரச்சனையில் டி.டி.ஆரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வடமாநில கும்பல்

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (07:47 IST)
டிக்கெட் பிரச்சனையால் டி.டி.ஆரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வடமாநில கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பணியில் இருந்தார்.  காட்பாடி அருகே அவர் பயணிகளிடம்  டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.
 
அந்த கும்பலிடம் டிக்கெட் இல்லாததால், சந்தோஷ்குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அந்த கும்பல் ஒரு கட்டத்தில் டி.டி.ஆரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். திருப்பதியில் வைத்து ஒருவனை கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய 5 பேர்  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments