Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது’ - சுவாதியின் தந்தை உருக்கம்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (18:31 IST)
சுவாதி கொலையுண்ட இடத்தில் கிடந்த அவருடைய அடையாள பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது என்று படுகொலையான சுவாதியின் தந்தை கூறியுள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று [ஜூன் 24ஆம் தேதி] காலை சுவாதி வாலிபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’எனது மகள் கொலை தொடர்பாக உறுதிபடுத்தப்படாத பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. யாராலும் அவளது உயிரை திருப்பி தர முடியாது.
 
ஆனால் அவளுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தகவல்களை ஏன் பரப்ப வேண்டும். கொலை தொடர்பான அனைத்து விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.
 
சுவாதி கொலையுண்ட இடத்தில் அவருடைய அடையாள அட்டை மற்றும் டை ஆகியவை கிடந்துள்ளன. அதை பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments