Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: சித்தராமையா திட்டவட்டம்.

Webdunia
வியாழன், 3 மே 2018 (12:42 IST)
காவிரி வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு வரும் செவ்வாய்க்கிழமை திட்ட வரைவுக்கான நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு,  தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசை எச்சரித்தது
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக சற்றுமுன் தெரிவித்துள்ளார். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லை  என்றும், அதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்பு கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் வரும் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments