Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைசென்ஸ் இல்லையா? உங்களுக்கு ஆப்புதான்: போக்குவரத்து ஆணையர் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (12:58 IST)
ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு புதிய வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என வாகன விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரி உத்தரவிட்டுள்ளார்.


 

 
நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு கவணம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
 
இதைத்தொடர்ந்து விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என போக்குவரத்து ஆணையர் தயானந்த கட்டாரி வலையுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அவர் வட்டார போக்குவரத்து மற்றும் சார்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அதில், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 9,231 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90% விபத்துக்கள் ஓட்டுநரின் கவணக்குறைவால் ஏற்படுகிறது. 
 
இதனைக் குறைக்க ஏற்கனவே உள்ள மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி விற்பனை செய்தால், விற்பனையாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments