Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரி கொண்டு வரும் திட்டமே இல்லை… நிதியமைச்சர் பதில்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:58 IST)
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி கொண்டு வரும் திட்டம் இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அண்ணா காலத்தில் நிதி திரட்டுவதற்காக லாட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் அது தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் லாட்டரி அதிபரும் திமுக அனுதாபியுமான மார்ட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலையை சரிசெய்ய லாட்டரி கொண்டுவரும் திட்டமே இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments