Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து விடப்படுகிறதா பாஜக! தமிழகத்தில் பூஜ்யமாக வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (08:22 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து குறைந்தது பத்து தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று அதிமுக தலைவர்களின் பேச்சு பாஜக மேலிடத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாஜகவுடன் கூட்டு இல்லை என்ற வகையில் நேற்று அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை எம்பி ஆகியோர் கடுமையான விமர்சனம் செய்துள்ளதால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்றே கணிக்கப்படுகிறது. தேர்தலுக்குள் தினகரன் கட்சியை இணைத்து கொள்வது மற்றும்  தமாக, பாஜக, தேமுதிக, பாமக, ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது ஆகிய ஆலோசனையில் அதிமுக மேலிடம் இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பாஜக தனித்துவிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழகத்தில் மிகக்குறைந்த வாக்கு சதவிகிதத்தை வைத்துள்ள பாஜக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இதனால் பாஜக கடைசியாக நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் ரஜினி தான் என்றும், அவரும் காலைவாரிவிட்டால் அதோகதிதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments