Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.! ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி.!!

Senthil Velan
செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:03 IST)
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவள்ளூர் தினத்தை ஒட்டி நெற்றியில் விபூதியுடன் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு தமிழக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் வாழ்த்து  தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
முதல்வரின் எக்ஸ் பதிவில்:
 
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
ALSO READ: கடுமையான பனிமூட்டம்.! ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
 
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments