Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள் இருந்தாலும் யார் யார் மாஸ்க் அணிய வேண்டுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (07:53 IST)
கொரோனா வைரஸ் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்னையில் உள்ள ஒரு சில பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது
 
குறிப்பாக சென்னையில் உள்ள அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், கோட்டூர்புரம், ஆலந்தூர் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே சென்றாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற செய்தி பரவி வருகிறது
 
ஆனால் இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றும் சமீபத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்துக்கு சென்று திரும்பியவர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் மேலும் கொரோனா அறிகுறி இருப்பதாக யாராவது சந்தேகப்பட்டால் அவர்களும் மாஸ்க் அணிந்து கொள்ளலாம் என்றும் மற்றபடி அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்தே சென்னையில் மிக வேகமாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments