இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (11:15 IST)
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இனி வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வரும் நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில், "கோடை காலம் இன்றுடன் முடிகிறது. இன்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு தனித்துவமான ஆண்டாக, வெப்ப அலை இல்லாத ஆண்டாக இருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.
 
"இந்த ஆண்டு மே மாதத்தில், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ்-ஐ ஒரு நாளும் தாண்டவில்லை. கடந்த 25 ஆண்டுகளில், இது போல் மூன்று முறை நடந்துள்ள நிலையில், இது நான்காவது முறை," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அரபிக்கடல் மற்றும் அங்காள விரைகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அது புயலாகவும் மாறலாம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"இனிமேல் கோடை காலம் இல்லை. அவ்வப்போது மழை பெய்யும். கோடை இல்லாத மே மாதத்தை நன்றாக அனுபவியுங்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments