ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (13:16 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக இலவச மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.

ஆனால் இனி ரேஷன் பொருட்களான அரிசி, ஜீனி போன்றவை இலவசமாக வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக ‘நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும்’ என்ற செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments