Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (13:16 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக இலவச மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.

ஆனால் இனி ரேஷன் பொருட்களான அரிசி, ஜீனி போன்றவை இலவசமாக வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக ‘நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும்’ என்ற செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments