Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து கூறியது தவறில்லை: நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (12:41 IST)
தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது.
 
எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து வைரமுத்து மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர் அவர்கள். ஆண்டாள்-வைரமுத்து விவகாரம் முடிவே இல்லாமல் தொடர் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
 
இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி கருத்துக்களை நீதிபதி கூறியுள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
 
ஆராய்ச்சி கட்டுரையை தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். அவரது சொந்த கருத்தாக அவர் அதை கூறவில்லை. விஎச்பி மற்றும் அரசியல் கட்சிகள் தான் இந்த விவகாரத்தை பெரிதாக்குகின்றன என வைரமுத்து தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments