Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்போர்ட்டில் இனி பேட்டி கொடுக்க மாட்டேன்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (16:55 IST)
விமான நிலையத்தில் இனி பேட்டி அளிக்கமாட்டேன் என்றும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி அழைப்பேன் என்றும் இனிமேல் அனைத்தையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்றும் அங்கு அவர் அமைச்சராக போகிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லியில் பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலையை விமான நிலையத்தில் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்த போது இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் அனைத்தும் இனிமேல் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி என்றும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
விமானத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கும்போதே சில விஷயங்கள் நடந்து வருகிறது என்றும் அது தெரியாமல் நான் பேட்டி அளித்தால் பிரச்சனையாகிவிடும் என்றும் அதனால் இனிமேல் ஏர்போர்ட்டில் பேட்டி கிடையாது என்றும் பேட்டி எப்போது என்பதை முன்கூட்டியே செய்தியாளர்களுக்கு அறிவித்து விடுவோம், அந்த பேட்டியும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments