5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது: வானிலை அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (09:18 IST)
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் வரும் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு கேரளா ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது
 
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments