Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு பொருந்தாது: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:11 IST)
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருப்பது என்பது தெரிந்ததே. நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் மே இரண்டாம் தேதி ஞாயிறு அன்று வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிறு என்பதால் முழு ஊரடங்கு அமலில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
மே இரண்டாம் தேதி ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்றும் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார் 
இதனை அடுத்து மே இரண்டாம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் இந்த விதிவிலக்கு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அன்றைய தினம் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments