Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் தந்தை மகனுக்கெல்லாம் இடமில்லை: முதல்வர் ஜெயலலிதா

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (15:06 IST)
அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை இன்று தலைமை தாங்கி நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சித்தார்.


 
 
திருமணவிழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, அரசியலில் தந்தை மகனுக்கெல்லாம் இடமில்லை என கூறினார். ஒரு சிறு கதை மூலம் அவர் இந்த கருத்தை கூறினார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் ஆகியோரை தான் ஜெயலலிதா பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக கூறினார்.
 
திமுக-வில் உள்ள குடும்ப அரசியலை தான் ஜெயலலிதா, தந்தை மகனுக்கெல்லாம் அரசியலில் இடமில்லை என கூறியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என வேண்டுகோல் விடுத்தார்.
 
தமிழ்நாட்டின் நலன் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறையில்லாத எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. அதிமுகவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் அதிமுக மீது வசைபாடுவதையே ஒரே நோக்கமாக வைத்துள்ளதாக ஜெயலலிதா கூறினார்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு, அரசியலே பாடம் கற்றுகொடுக்கும். அடுத்தவர் மகிழ்ச்சியில் தங்கள் மகிழ்ச்சி என வாழ்வதே இல்லறம் என முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments