அப்படி என்ன பேசபோறாங்க? செயற்குழு கூட்டத்தில் போன்களுக்கு தடா...

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (09:26 IST)
மாறாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கூட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று செயற்குழு கூட்டம் கூடவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு வழக்கத்திற்கு மாறாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என சர்ச்சை எழுந்த நிலையில் இம்முறை செல்போன் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments