Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.டி.எம்-ல் பணம் இல்லை - பொதுமக்கள் அவதி

ஏ.டி.எம்-ல் பணம் இல்லை - பொதுமக்கள் அவதி

ஏ.டி.எம்-ல் பணம் இல்லை - பொதுமக்கள் அவதி
, வெள்ளி, 11 நவம்பர் 2016 (08:26 IST)
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏ.டி.எம்-ல் இன்னும் புதிய பணம் நிரப்பபடவில்லை என்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


 

 
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல், ஏ.டி.எம்-ல் உள்ள பழைய நோட்டுகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக, கடந்த 9 மற்றும் 10 ந் தேதிகளில் ஏ.டி.எம் செயல்படாது என்றும், இன்று முதல் (நவ.11) ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து கடந்த 2 நாட்களாக பணம் எடுக்க முடியாமல் தவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முன்பே ஏ.டி.எம் மையங்கள் முன்பு குவிந்தனர். ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடியே கிடக்கிறது. அப்படி திறந்திருக்கும் ஏ.டி.எம் மையங்களிலும் பணம் இல்லை. 
 
எனவே, அவரச செலவுக்காக பணம் எடுக்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என பல மாவட்டங்களிலும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் புலம்பிய படி திரும்பி செல்கின்றனர்.
 
இதனால், வேலைக்கு செல்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் என ஏராளமான பொதுமக்கள், அரசு தங்களை  வாட்டி வைப்பதாக குறை கூறி வருகின்றனர். 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் அடுத்த அட்டாக் தங்கம், நிலம் : வருகிறது அடுத்த ஆப்பு...