Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும் அனுமதி இல்லை: சென்னை மாநகராட்சி!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:34 IST)
இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும் அனுமதி இல்லை: சென்னை மாநகராட்சி!
சென்னையில் இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையிலுள்ள மெரினா கடற்கரை உள்பட பல கடற்கரைகளில் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் குவிந்து வருவது உண்டு என்பதும் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் இன்று முதல் அதாவது ஜனவரி 2 முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 
 
ஏழை எளிய மக்களின் ஒரு சுற்றுலாதலமாக விளங்கி வரும் கடற்கரைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments