Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது நிவர் புயல்; மாலைக்குள் தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (08:37 IST)
தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் அருகே தெற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது முதலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை பிற்பகலில் நிவர் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments