Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார் வீட்டுக்குப் போன நபர் காரில் நிர்வாணப் பிணம் -நித்தியின் சீடருக்கு நேர்ந்த கொடூரம்!

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (07:40 IST)
பாண்டிச்சேரியில் பேக்கரி நடத்தி வந்த வஜ்ரவேலு என்பவர் கொலை செய்யப்பட்டு காரில் நிர்வாணமாகக் கிடந்ததை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் உள்ள ஏம்பலம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு. இவர் இரு பேக்கரிகளை நடத்தி வருகிறார். நித்யானந்தா மேல் கொண்டிருந்த பக்தியால் இரு பேக்கரிகளுக்கு நித்யானந்தாவின் பெயரை வைத்துள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் செவ்வாய்கிழமை இரவு தனது பேக்கரியை மூடிவிட்டு குருவி நத்தம் எனும் பகுதியில் அமைந்துள்ள மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க செல்வதாக சொல்லி சென்றுள்ளார். அங்கு சென்று பணத்தை வாங்கிய அவர் அதன் பின் மாயமாகியுள்ளார். இது சம்மந்தமாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வஜ்ரவேலுவைத் தேட ஆரம்பித்துள்ளது காவல்துறை.

இந்நிலையில் குருவிநத்தம் பகுதிக்கு அருகாக அவரது கார் நிற்க, அதற்குள் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார் வஜ்ரவேலு. இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வஜ்ரவேலுவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments