Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரத்துக்கு வரும் நிர்மலா சீதாராமன்: மக்களுடன் இணைந்து கும்பாபிஷேகத்தை பார்க்கிறார்..!.

Siva
திங்கள், 22 ஜனவரி 2024 (07:40 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காஞ்சிபுரம் வர இருப்பதாகவும் அவர் மக்களோடு மக்களாக எல்.இ.டி திரையில் ராமர் கோயில் திறப்பு விழா கும்பாபிஷேகத்தை பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது என்பதும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்பதும் தெரிந்தது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்   உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்துக்கு இன்று வருகை தருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் ராமர் கோயில் திறப்பு விழாவை, மக்களுடன் இணைந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் காண போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், எல்இடி திரையில் மக்களுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments