Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடம் - நிர்மலா சீதாராமன்

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (16:09 IST)
தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதும் திகழ்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் ’நூற்றாண்டு விழா’ கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதுமே திகழ்ந்து வருகிறது. நானும் இதில் பங்கு வகிக்கிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த பெருமையாக உள்ளது.
 
கல்வி நிறுனங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பெண்கள் மேம்பாட்டுக்கும், சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அந்த வகையில், நூற்றாண்டைக் கடந்துள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சிறந்த கல்விச் சூழலை மாணவிகளுக்கு தொடர்ந்து உருவாக்கித் தருவதோடு, பெண்கள் மேம்பாட்டுக்கும் அடித்தளம் அமைத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது" என்றவர், தொடர்ந்து கல்லூரியின் நூற்றாண்டு லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். 
 
மேலும் இந்த விழாவில் கல்லூரி முன்னாள் மாணவியும், தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் முதல் பெண் இயக்குநருமான அருணா பஹுகுனாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments