Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிர்மலாதேவி: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (09:31 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு நேற்று நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. எனவே சிறை நடைமுறைகள் முடிந்து இன்று அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சிக்கல் நிர்மலாவுக்கு ஏற்பட்டுள்ளது. நிர்மலாவுக்கு ஜாமீன்தாரார்களாக பொறுப்பேற்று அவரை அழைத்து செல்ல அவருடைய குடும்பத்தினர் உள்பட யாரும் முன்வராததால் நிர்மலா வெளியே வரமுடியவில்லை. இதனால் நிர்மலாதேவி திகைப்பில் இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
நிர்மலாதேவி சிறைக்கு சென்ற இத்தனை மாதங்களில் அவருடைய பெற்றோர் உள்பட யாரும் அவரை சிறைக்கு சென்று பார்க்கவில்லை என்பதும், அவருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூட அவருடைய உறவினர்கள் முன்வரவில்லை என்பதும் நிர்மலாதேவியின் வழக்கறிஞர்தான் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments