Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… தாய் தந்தை இல்லாத போது மாணவன் விபரீத முடிவு!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:08 IST)
சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்காமல் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் புஷ்பாநகர் வினோத் தெருவை சேர்ந்த தம்பதிகள் செல்வகுமார் மற்றும் சுந்தரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் விக்னேஷ் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் ஜெய் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் அவர் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் அந்த வகுப்புகள் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் நேற்று மதியம் தாய் தந்தை இருவருமே வீட்டில் இல்லாத போது தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக பள்ளிக்கரணை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்தே இதுபோல மாணவர்கள் தற்கொலை செய்துவருவது வாடிக்கையாகி வருவது கவலையை அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments