Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (20:59 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தீவிரம் அடைந்ததால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதாவது தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது
 
இதன்படி சற்றுமுன் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா அறிவித்துள்ளார். இதனையடுத்து மற்ற மூன்று மாவட்ட ஆட்சியர்களும் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments