Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான ஆறே நாளில் புதுப்பெண் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (10:49 IST)
திருமணம் ஆன ஆறே நாளில் புதுப்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வலப்பிரம்மன்காடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் நித்யா என்பவருக்கும் திருநாளூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவீட்டார்களும் சந்தோஷமாக இந்த திருமணத்தை நடத்தி வந்தபோதிலும் திருமணமான முதல் நாளில் இருந்தே மணமக்கள் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். திருமணமான மூன்றாம் நாளே மணமகன், மணமகள் இருவரும் தனித்தனியாக தற்கொலைக்கு முயன்றதால் மணவீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நித்யாவின் பெற்றோர் தங்கள் மகளை அழைத்து செல்வதாகவும் சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்து வருவதாகவும் மாப்பிள்ளை வீட்டில் கூறி தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் தாய்வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் நித்யா மீண்டும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இருவீட்டாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள புதுக்கோட்டை போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments