Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் முடிந்த கையோடு போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஜோடிகள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (12:12 IST)
கோவை வ.உ.சி. பூங்காவில் திருமணம் முடிந்த கையோடு ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.


 

இந்நிலையில், புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்த கையோடு கோவை வ.உ.சி. பூங்காவில் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments