Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்துக்காக தாய்மாமன் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பரிதாப பலி: தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (15:59 IST)
விருந்துக்காக தாய்மாமன் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பரிதாப பலி: தேனியில் அதிர்ச்சி சம்பவம்!
புதிதாக திருமணமான தம்பதிகள் விருந்துக்காக தாய் மாமா வீட்டிற்கு சென்று இருந்த போது ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சமீபத்தில் காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததை அடுத்து ராஜாவின் தாய்மாமா வீட்டிற்கு விருந்திற்காக புதுமண தம்பதிகள் சென்றனர்
 
அப்போது அருகில் உள்ள பெரியாற்று கோம்பை என்ற ஆற்றில் குளிப்பதற்காக புதுமண தம்பதிகள் சென்றபோது திடீரென ஆற்றுநீர் இருவரையும் அடித்து சென்றது. அவர்களை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
 
இதுகுறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் புதுமண தம்பதிகளை பிணமாக மீட்டனர். திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் புதுமண தம்பதிகள் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்: அமித்ஷா நிபந்தனை?

3 பேருக்கு தங்க நாணயம், 300 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்! - கூட்டம் சேர்க்க அதிமுகவின் பலே ப்ளான்!

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments