Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்: ராஜேஷ் லக்கானி

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (04:26 IST)
புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

 
மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் பின்பு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அது குறித்த பயிற்சி முகாம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments