Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டுக்குள் புதிய ரயில் நிலையம்; கலகலக்கும் கிளாம்பாக்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:10 IST)
கிளாம்பாக்கத்தில் ஒரு ஆண்டுக்குள் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் பெரும் செலவில் புதிய பேருந்து முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பேருந்து முனையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

புதிய பேருந்து முனையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையமும் அமைய உள்ளது. கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ வழங்க உள்ளது.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை பேருந்து முனையம் செல்லும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் உதவியாக அமையும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments