Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தலைமை செயலக ஊழியர்களுக்கு அபராத அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:22 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது என்பதும் பகலிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே 
 
குறிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக முதன்மை செயலாளர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் என்றும் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments