Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கனமழை பெய்யும்;பின் படிப்படியாக குறையும் : வானிலை மைய இயக்குனர் ரமணன்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (14:09 IST)
தமிழகத்தில் மீண்டும் கனமழை பொழியும். அதன்பின் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார். 


 
 
ஏற்கனவே பெய்த, பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன்,  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது.  ஆனால், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 
 
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிறைய இடங்களில் மழை பெய்யும். அதன்பின், இரண்டு நாட்களில் படிப்படியாக மழை குறையும்” என்று  கூறினார்.
 
மேலும் கூறிய அவர் “அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 114 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் மழை சராசரி 79 செ.மீ தான். எனவே இது கூடுதல் மழைதான். ஆனால் இது போன்ற மழை 2005ஆம் ஆண்டும் பெய்துள்ளது. நேற்று, சென்னையில் நான்கு மணி நேரம் பெய்த கனமழையில், அதிகபட்சமாக தாம்பரம் பகுதியில் 17.செ.மீ மழை பதிவாகியுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments