Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: சிக்குகிறார் திருச்சி தொழிலதிபர்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (06:33 IST)
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு புரோக்கர் சுகேஷ் மூலம் ரூ.60 கோடி கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் தினகரனிடம் தற்போது டெல்லி போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.




இந்த விசாரணையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஹவாலா பணம் நரேஷ் என்பவர் மூலம் கைமாறப்பட்டதாகவும், இந்த கைமாற்றலில் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் திருச்சி தொழிலதிபர் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்

தினகரன் வழக்கில் ஏற்கனவே ஒரு எம்பி மற்றும் தினகரனின் வலது கை போன்று செயல்பட்ட ஒருவர் குறி வைக்கப்பட்டு அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த லிஸ்ட்டில் திருச்சி தொழிலதிபரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments